கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, September 23, 2008

கோவியாருக்கு எச்சரிக்கை

பொறுத்துப்பொறுத்துப்பார்த்து வேறு வழியில்லாமல் தான் இதை எழுத வேண்டியதாகி விட்டது. தெரிந்து செய்கிறாரா,தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை. இனிமேலும் இதை சுட்டிக்காட்டாமல் இருந்தால் தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள். சுவாரஸ்யம் என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொல் என்ன என்று கேட்டு இராம.கி அய்யா "சுவையாரம்" என்ற சொல்லை வழங்கினார். கேள்வி கேட்டவரே கோவியார் தான். இப்போது அவரே சுவையார்வம் என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். சுவையாரமா, ஆர்வமா எது சரி? கோவியாரின் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

கொஞ்சம் அரசியல்

எம்ஜியார் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை படிக்க நேர்ந்தது. திமுகவை விட்டு விலகிய பின் எம்ஜியார் சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல். அதில் போட்டியிட்ட மாயத்தேவரை விளிக்கும் போதெல்லாம் மாயன் என்றே விளித்தாராம்.அதனால் அவர் சாதியைக்கடந்தவராம். ஆனால் மாயன் என்ற பெயரில் மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டிருந்தவருக்கு மாயத்தேவர் என்ற பெயர் சூட்டி தேர்தலில் நிற்க அனுமதித்தவரே எம்ஜியார் தான்.சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்ளும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்ட திராவிட இயக்கங்களின் தலையில் மண் அள்ளிப்போடும் விதமாக சாதிப்பெயருடன் ஒருவரை தேர்தலில் நிற்க அனுமதித்தது தவறில்லையாம், சாதிப்பெயரை தவிர்த்துவிட்டு மேடையில் பேசியது உயர்வான செயலாம். என்னாங்கடா உங்க வார்த்தை ஜாலம்.

35 ஆண்டுகளுக்கு முன்பே சாதி அரசியலுக்கு வழிவகுத்தவர் எம்ஜியார்.இத்தனை வருடங்களில் சாதியில்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையிலும் கலைஞர் சென்ற சட்டமன்ற தெர்தலின் போது மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒச்சாத்தேவர் என்ற வேட்பாளர் நிறுத்தப்பட்ட போது சாதி்ப் பெயருடன் கூடிய வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்ல மூ.மு.க கூட்டணியை விட்டு விலகியதும் வரலாறு.

அடுத்து சினிமா

சமீபத்தில் திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் அஞ்சாதே,மற்றும் வேட்டையாடு விளையாடு. இதே கதையுள்ள இரண்டு ஆங்கிலப்படங்களை பார்த்தேன் . DEVIL'S OWN, மற்றும் BONE COLLECTOR. அஞ்சாதே, டெவில்ஸ் ஓன் படத்தின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். வேட்டையாடு விளையாடு போன் கலெக்டரின் அப்பட்டமான காப்பி.

7 comments:

said...

உங்க பதிவை படிச்சிட்டேன், இத்யே என் பதிவுல பாத்தா கோவிக்கப்ப்டாது

said...

//கோவியாருக்கு எச்சரிக்கை

பொறுத்துப்பொறுத்துப்பார்த்து வேறு வழியில்லாமல் தான் இதை எழுத வேண்டியதாகி விட்டது. தெரிந்து செய்கிறாரா,தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை. இனிமேலும் இதை சுட்டிக்காட்டாமல் இருந்தால் தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள். சுவாரஸ்யம் என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொல் என்ன என்று கேட்டு இராம.கி அய்யா "சுவையாரம்" என்ற சொல்லை வழங்கினார். கேள்வி கேட்டவரே கோவியார் தான். இப்போது அவரே சுவையார்வம் என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். சுவையாரமா, ஆர்வமா எது சரி? கோவியாரின் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.//

ஜாலிஜம்பர்,

சுவையாரம் என்று எழுதினால் அது என்ன பணியாரம் என்று கேட்பார்கள் :) அதனால் தான் சுவை + ஆர்வம் (ஆகா அப்படியான்னு கேட்பது) > சுவையார்வம் என்று எழுதுகிறேன்.

:)

said...

//கொஞ்சம் அரசியல்

//எம்ஜியார் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை படிக்க நேர்ந்தது.//

நான் கூட அப்படி எழுதி இருக்கிறேன், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் எந்த சாதி முத்திரையும் அவர்மீது இருக்கவில்லை என்று எழுதினேன். மற்றபடி அவர் சாதி அரசியலை ஆதரிக்கவில்லை என்றெல்லாம் எழுதவில்லை.

:)

said...

குடுகுடுப்பை வருகைக்கு நன்றி.

said...

//சுவையாரம் என்று எழுதினால் அது என்ன பணியாரம் என்று கேட்பார்கள் :) அதனால் தான் சுவை + ஆர்வம் (ஆகா அப்படியான்னு கேட்பது) > சுவையார்வம் என்று எழுதுகிறேன்.//

கோவியாரே,
சுவையாரத்தை மறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.சுவையார்வமும் நன்றாகத்தான் இருக்கிறது.

//நான் கூட அப்படி எழுதி இருக்கிறேன், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் எந்த சாதி முத்திரையும் அவர்மீது இருக்கவில்லை என்று எழுதினேன்.//

அப்பட்டமான உண்மை.இந்தக்காரணத்திற்காகவே சாதிகளால் பிளவுண்டிருக்கும் தமிழகத்திற்கு ரஜினி அரசியலுக்கு வருவது நல்லது தானே என்ற விபரீத ஆசையும் மனதில் தோன்றுகிறது.:-((

said...

எம்.ஜி.ஆர் ராமச்சந்திர மேனன் தான். தமிழ் நாட்டில் நாம் மறந்தது நல்லதே.

said...

வருகைக்கு நன்றி கொலக்கா.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்