கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, June 7, 2010

Saturday, January 23, 2010

எம்சியாரின் கருணையுள்ளம்

மூளையால் ம‌ட்டுமே சிந்திப்பவர்கள் , எம்சியாரை கோமாளி என்று தூற்றுவது வழக்கம்.இதயத்தாலும் சிந்திப்பவர்களால் தான் எம்சியாரை புரிந்து கொள்ளமுடியும்.குலேபகாவலி என்னும் திரைப்படத்தில் புலியுடன் ஒன்டிக்கு ஒன்டி சண்டை போட நேரிடும் போது ,எம்சியார் நடந்து கொண்டவிதம் அவர் மீது பெருமதிப்பை ஏற்படுத்தி விட்டது.கையிலே கத்தியுடன் இருக்கும் எம்சியார்,புலி நிராயுதபாணியாக வருவது கண்டு கத்தியை கீழே போட்டுவிட்டு வெறுங்கைகளால் கட்டிப்புரண்டு சண்டையிடுவார்.புலி இறந்து விடாதிருக்கும் பொருட்டு கவனமாக சண்டை போடுவார்.ஒரு வழியாக புலியை மூர்ச்சையாக்கி விட்டு நடந்து போவார்.விசமத்தனத்தில் நம்பியாரை விடவும் மோசமான அந்தப்புலி மயக்கம் போட்டது போல் நடித்து,எம்சியார் நடந்து செல்லும் போது பின்பக்கமாக பாய்ந்து சென்று தாக்கும்.உடனே எம்சியார் ,கீழே கிடந்த கத்தியை எடுத்து குத்தி கொன்று விடுவார்.நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு குப்புறப்படுத்து தலையணையில் முட்டி அழுதேன்.அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த என் அப்பா,என் மனநிலையைப் புரிந்தவாறு "அதான்,சீ நாயேன்னு விட்டுட்டுப் போய்ட்டாருல்ல,அப்புறம் ஏன் பின்னாடி போய்க் கடிக்கிற,நல்லா வேணும்" என்று பின்னூட்டம் போட்டார்.அதோடு இன்னும் சில தகவல்களை சொன்னார்.ஒரு படத்தில் பெண் ஒருவருடன் கத்திச்சண்டை போடும் போது , இடது கையால் கத்தியைப் பிடித்து சண்டையிடுவாராம்.இன்னொரு படத்தில் ஒற்றைக்காலில்லாத ஒருவருடன் ,இவரும் ஒரு காலைக்கட்டிக்கொண்டு சண்டையிடுவாராம்.இப்பேர்ப்பட்ட மாவீரன் இன்று நம்மிடையே இல்லையே என்ற எண்ணம் ஏக்கப்பெருமூச்சாகி தொண்டையை அடைத்தது.இவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தமிழக காவல் துறையை இலங்கைக்கு அனுப்பி ராசபக்சேயை கொன்றிருப்பாரே என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.கத்தியோடு தாக்க வருபவனிடம் கண்ணியமாக நடந்து கொள்வது எப்படி என்று இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை.அவர்களுக்கு எம்சியார் படத்தைப் போட்டுக்காண்பிக்க வேண்டியது அரசின் கடமை.

Thursday, October 1, 2009

பொறியியல் கல்லூரி இடஒதுக்கீடு







பொறியியல் கவுன்சிலிங்கில், முற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சேர்க்கை சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. தமிழகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படுகிறது. பொறியியல் கவுன்சிலிங்கில், பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 26.50 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதம், ஆதிதிராவிடருக்கு 15 சதவீதம், அருந்ததியினருக்கு 3 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 31 சதவீத இடங்கள், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக ஒதுக்கப்படுகின்றன.


இந்த ஆண்டு, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 995 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 14 ஆயிரத்து 362 பேர் (11.13%) முற்படுத்தப்பட்ட வகுப்பினர். 5,737 பேர் (4.45%) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள். 1,615 பேர் (1.25%) அருந்ததியினர். 61 ஆயிரத்து 770 பேர் (47.89%) பிற்படுத்தப்பட்டவர்கள். 28 ஆயிரத்து 492 பேர் (22.09%) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். 16 ஆயிரத்து 611 பேர் (12.88%) ஆதிதிராவிடர். 408 பேர் (0.32%) பழங்குடியினர்.


இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 83 ஆயிரத்து 552 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 5,244 பேர் (6.28%) முற்படுத்தப்பட்ட வகுப்பினர். 3,655 பேர் (4.37%) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள். 1,179 பேர் (1.41%) அருந்ததியினர். 41 ஆயிரத்து 449 பேர் (49.67%) பிற்படுத்தப்பட்டவர்கள். 20 ஆயிரத்து 147 பேர் (24.11%) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். 11 ஆயிரத்து 549 பேர் (13.82%) ஆதிதிராவிடர். 279 பேர் (0.33%) பழங்குடியினர்.


பொறியியல் மாணவர் சேர்க்கையில், முற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சேர்க்கை சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது.


2005ம் ஆண்டில் 10.13 சதவீதமாக இருந்த முற்படுத்தப் பட்டோர் சேர்க்கை சதவீதம், 2006ம் ஆண்டில் 9.82 சதவீதமாகவும், 2007ம் ஆண்டில் 8.11 சதவீதமாகவும், 2008ம் ஆண்டில் 6.74 சதவீதமாகவும், 2009ம் ஆண்டில் 6.28 சதவீதமாகவும் சரிந்துள்ளது.


அதேபோல, 2005ம் ஆண்டு 21.83 சதவீதமாக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சேர்க்கை சதவீதம், 2006ம் ஆண்டு 20.98 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், அடுத்த ஆண்டுகளில் இப்பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2007ம் ஆண்டில் 22.70 சதவீதம் பேர், 2008ம் ஆண்டில் 23.78 சதவீதம் பேர், 2009ம் ஆண்டில் 24.11 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 53 - 54 சதவீத அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆதிதிராவிடர் பிரிவில், கடந்த ஆண்டுகளில் 14 - 15 சதவீதம் பேர் சேர்ந்துள்ளனர். பழங்குடியினர் பிரிவில், 0.5 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை.


நன்றி‍‍‍‍ தினமலர்

Wednesday, July 15, 2009

மருத்துவக்கல்லூரி இடஒதுக்கீடு

இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலைப் பார்த்த போது ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் புலப்பட்டன.தமிழகத்தின் மக்கள் தொகை சாதிவாரியாக பிற்பட்டோர் 46%, மிகவும் பிற்பட்டோர்18%,தாழ்த்தப்பட்டோர்20%,முற்பட்டோர்13%,மற்றவை3%
என்று ஒரு தகவல் கூறுகிறது. மருத்துவக்கல்லூரி மொத்த இடங்கள் தோராயமாக 1500.இந்த இடங்களை தரவரிசைப்படியே நிரப்பினால் ,பிற்பட்டோர் பிரிவு வியக்கவைக்கும் அளவிற்கு அதிக இடங்களைப் பெற்றுள்ளது.சுமார் 1020 இடங்கள்.பிற்பட்டோரின் 46 சதவிகிதப்படி அவர்கள் பங்கு 690 இடங்கள் என்றால்,அபரிமிதமான வளர்ச்சியாக கூடுதலாக 330 இடங்கள் பெற்றுள்ளனர். முற்பட்ட வகுப்பினர் 30,40 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நிலையில் தான் இருந்திருக்கவேண்டும்.அந்த நிலையை பிற்பட்டோர் அடைந்துள்ளனர்.இடஒதுக்கீட்டின் நோக்கத்தை எப்போதோ அடைந்து அதைத்தாண்டியும் சென்றுவிட்டனர்.
அடுத்து மிகவும் பிற்பட்டோர் 18சதவிகிதப்படி அவர்கள் பெற வேண்டிய இடங்கள் 270.இட ஒதுக்கீடு இல்லாமல் தரவரிசைப்படியே அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 272. இட ஒதுக்கீட்டின் நோக்கம் இப்போது தான் நிறைவேறியுள்ளது.

அடுத்து தாழ்த்தப்பட்டோர் 20 சதவிகிதப்படி 300 இடங்கள் பெறவேண்டும், பெற்றிருப்பதோ 73 இடங்கள் மட்டும். இட ஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவடையவில்லை.

அடுத்து முற்பட்டோர் 13சதவிகிதப்படி 195 இடங்கள் பெற்றிருக்க வேண்டும்,ஆனால் பெற்றிருப்பதோ 136 இடங்கள் மட்டுமே.1500 இடங்களையும் திறந்த முறையில் தேர்வு செய்தாலும் அவர்கள் பங்கிற்கு குறைவாகவே பெற்றுள்ளனர்.இட ஒதுக்கீட்டின் நோக்கம் நேரடியாக பாதிக்கிறது.

சாலிசம்பர் கமிசன் பரிந்துரைகள்:
பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் மாற்றம் தேவை,இது இப்படியே தொடருமானால் இன்னும் சில,பல ஆண்டுகளில் முற்பட்ட வகுப்பினர் மிகமிகக் குறைந்த இடங்களையே பெறும் சூழ்நிலை உருவாகலாம்.பிற்பட்டோர் இடஒதுக்கீட்டை அப்படியே ரத்து செய்தாலும் பாதிப்பு ஒன்றும் ஏற்படாது,திறந்த முறையிலேயே அவர்கள் பங்கான 690 இடங்களைப் பெற்றுவிடலாம்.ஆனால் ரத்து செய்வது சாத்தியமில்லை என்பதால் 30 சதவிகித ஒதுக்கீடு என்பதை 23சவிகிதமாகக் குறைக்கலாம்.

மிகவும் பிற்பட்டோருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதால் பாதிப்பு ஒன்றுமில்லை.ஆனாலும் இடஒதுக்கீட்டின் நோக்கம் இப்போது தான் நிறைவேறியுள்ளதால் ,இப்பிரிவினருக்கு சலுகை காலமாக சில,பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவினர் மிகமிகக் குறைந்த இடங்களையே பொதுப்பிரிவில் பெற்றிருப்பதால் அவர்களுக்கான இடஒடுக்கீட்டின் அளவையும் கூட்டி இன்னும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்,அல்லது திறந்த முறையில் அவர்கள் பங்கான சுமார் 300 இடங்களைப் பெறும் வரையிலும் நீட்டிக்க வேண்டும்.

முற்பட்ட வகுப்பினர் தங்கள் பங்கை விட குறைவாகவே பெற்றுள்ளதால் இடஒதுக்கீடு பெற இவர்களும் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.7 சதவிகித இடஒதுக்கீடு கேட்பது நியாயமானதே.அனைத்து முற்பட்டோருக்கும் சேர்த்து 7% ஒதுக்கீடு செய்யலாம்.
அதே நேரத்தில் இதே வகையான ஒதுக்கீடு உயர்கல்வி நிறுவனங்களிலும்,மத்திய அரசு துறைகளிலும் வருவதற்கு முற்பட்ட வகுப்பினர் ஆதவளிக்க வேண்டும்,சமத்துவ இந்தியா விரைந்து மலரட்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
http://www.rediff.com/news/2006/may/30spec.htm
http://www.tn.gov.in/misc/dme/UG-2009-2010/meritlist2009-2010_010709.pdf
http://www.southasianmedia.net/Magazine/Journal/13_obc-reservation.htm




Friday, June 5, 2009

அண்ணாவின் கடிதமும்,அறிவுசீவியின் அழிச்சாட்டியமும்

அண்ணா மரணப்படுக்கையில் இருந்த போது தன் குடும்பத்தினருக்கு எழுதியது இந்தக்கடிதம்.குடும்பத்தாருக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய போது கூட கட்சியையும்,அதற்காக உழைப்பவர்களையும் மறக்கமுடியவில்லை அண்ணாவால்.கட்சிக்காரர்களில் முதலாவதாக கலைஞரையும்,அடுத்து ஆதித்தனார்,நாவலர் ஆகியோரையும் கேட்டு எழுதியுள்ளார்.

இந்தத் தகவலை இங்கே குறிப்பிட காரணம்,அறிவுசீவி ஒருவரின் அழிச்சாட்டியம். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை ஒன்று காலச்சுவடு இதழில் வெளிவந்தது.அந்தக்கட்டுரையில் ஓரிடத்தில் கூட கலைஞர் பெயர் குறிப்பிடப்படவில்லை.அண்ணாவின் வாழ்க்கையிலும்,திமுகவின் வரலாற்றிலும் கலைஞர் பெயர் குறிப்பிடாமல் கட்டுரை வரையும் போட்டி காலச்சுவடு நடத்தியதா என்று தெரியவில்லை.கட்டுரையாளருக்கு ஏன் கலைஞர் மீது இப்படி ஒரு காழ்ப்பு?.

சோற்றுக்கு சிங்கியடித்து,பிள்ளைகுட்டிகளை தவிக்கவிட்டுவிட்டு,கடைசியில் அனாதையாக சாவதே நல்ல தலைவனின் இலக்கணமாக ஒரு கருத்தாக்கம் நம்மை அறியாமலே நாம் உருவாக்கிக்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.இத்தகைய தியாகங்கள் செய்யாததால் கலைஞர் ஒரு சாராரால் வெறுக்கப்படுகிறார் என்றும் எண்ண வேண்டியுள்ளது.

கடவுளே , திராவிடர்களிடமிருந்து கலைஞரைக் காப்பாற்று,ஆரியர்களை அவரே பார்த்துக்கொள்வார் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் இக்கட்டான நிலைக்கும் நம்மை கொண்டுவந்துவிட்டார்கள் இந்தக்காழ்ப்பாளர்கள்.
படத்திற்கு நன்றி: சண்டே இந்தியன் இதழ்

Friday, May 22, 2009

விசயகாந்த் வேதனை அறிக்கை.

//இந்தியாவின் மக்கள்தொகை 110 கோடி.தமிழ்நாட்டு மக்கள் தொகை 8 கோடி. மொத்த மக்கள்தொகையில் தமிழர்கள் 8 சதவீதம்.மத்தியில் அமையப்போகும் அரசின் அமைச்சர்கள் எண்ணிக்கை 80. தமிழ்நாட்டின் பங்கு 8 சதவீதப்படி 6.5 தமிழகத்திற்கு கிடைக்கவேண்டும்.தமிழக காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கியது போக 4.5 இடங்கள் தான் திமுகவிற்கு கொடுக்கப்படவேண்டும். ஆனால் திமுக தலைவரோ 7 இடங்களுக்கும் அதிகமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.இதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கும் சவால் விடுகிறார்.இந்தப்போக்கை காங்கிரசுக்கட்சி அனுமதிக்கக்கூடாது.//

இவ்வாறு விசயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்தக்கருத்தை சோ வரவேற்றிருக்கிறார்.

Sunday, May 17, 2009

இந்தியா பிழைத்தது

செல்லும் வழியெங்கும் நச்சுக்கிருமிகளை விதைத்துச்செல்லும் நடமாடும் பிணம் அத்வானி ,பிரதமர் ஆகும் அபாயத்திலிருந்து நாடு தப்பித்துள்ளது.ஏற்கெனவே அத்வானியால் செலுத்தப்பட்ட நச்சுக்கிருமிகளால் ,இந்திய மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருந்தது,அதனால் இந்தமுறை கிருமிகளால் பெரிய பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.செயலலிதாவை பா.ச.க உடன் சேர விடாமல் ஏதோ ஒரு வகையில் தடுத்துதவிய கம்முனிச்சுடு தலைவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.123 ஒப்பந்தம் என்று யாருக்குமே புரியாத ஒரு விசயத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்த கம்முனிகளுக்கு மரண அடி.

//கலைங்ஞேன் என்ன குறை வச்சான் இவய்ங்களுக்கு,ரெண்டு,மூனு சீட்டுக்கு அந்தம்மா முன்னாடி போயி கையக்கட்டிக்கிட்டு , நிக்கிறாய்ங்க,வெக்கங்கெட்டவய்ங்க. 123 ஒப்பந்தம்,அணுஆயுதம் ஒப்பந்தம்,அதுக்காகத்தான் விலகுனோம் அப்படின்னு மேடை போட்டு பேசுனா எவனுக்காச்சும் வெளங்குமா, தோப்போம்னு தெரிஞ்சே மதுரையே கேட்டு வாங்கியாந்திருக்காய்ங்க, வெட்டிப்பயலுக,அதனால தான் தேர்தல் வேலைக்கே போகல// பத்து நாட்களுக்கு முன் மதுரை வேட்பாளர் மோகன் பிரச்சாரக்கூட்டத்தை கடந்து செல்கையில் ஆட்டோக்கார மார்க்சியர் புலம்பியது தான் இது.

ரத்னேஷ் அவர்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள படி திமுக,காங்கிரசு கூட்டணி சென்ற தேர்தலில் பெற்றிருந்த பலத்தை விட இம்முறை அதிகமாகவே பெற்றுள்ளது.ஒட்டுண்ணியான பாமக இல்லாததால் திமுகவிற்கு இன்னும் அதிக செல்வாக்கு மத்திய அரசிலே ஏற்படும். சுதந்திர இந்தியாவில் ,தமிழகத்தின் பொற்காலம் கடந்த ஐந்தாண்டுகள் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.இனியும் அப்படி ஒருகாலம் வருமா என்று மனக்கிலேசம் அடைந்திருந்தேன்,ஆனால் அதையும் விட அருமையான பொற்காலம் இனிமேல் தான் இருக்கிறது.இதையெல்லாம் சாதித்துக்காட்டிய கலைஞருக்கு தமிழினம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.கேவலமான அவதூறுகள்,பழிச்சொற்கள்,அபாண்டமான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டு ‘பாம்பு கடித்தால் திருப்பியா கடிக்கமுடியும்’ என்று கடந்து போன கலைஞரை புரிந்துகொண்டு அவருக்கான மரியாதையை அளித்துள்ளனர் மக்கள்.
தமிழினத்தலைவர் என்று மதிக்கப்படும் கலைஞர் மேல் காழ்ப்புகொண்டு நெடுமாறன்,ராமதாசு போன்றவர்கள் செய்த கேடுகெட்ட மொள்ளமாரித்தனங்கள் , இன்று அவர்களையே மூட்டைப்பூச்சியைப் போல் நசுக்குவது நசுக்கியுள்ளன.இப்போது வைகோ வரிசையில் இவர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் விசயகாந்தின் வரவு வைகோவுக்கு சாவுமணி அடித்தது,இந்தத்தேர்தலில் மருத்துவர் அய்யாவுக்கும் அடித்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் நலத்திட்டங்கள்,வளர்ச்சிப்பணிகள் போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஈழப்பிரச்சினையை வைத்து கலைஞரைக் கேவலப்படுத்திய
அறிவுசீவிகள்,உணர்வாளர்கள்,இணைய புரட்சியாளர்கள்,அனைவரும் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.
“தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது” .

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்