கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, June 5, 2009

அண்ணாவின் கடிதமும்,அறிவுசீவியின் அழிச்சாட்டியமும்

அண்ணா மரணப்படுக்கையில் இருந்த போது தன் குடும்பத்தினருக்கு எழுதியது இந்தக்கடிதம்.குடும்பத்தாருக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய போது கூட கட்சியையும்,அதற்காக உழைப்பவர்களையும் மறக்கமுடியவில்லை அண்ணாவால்.கட்சிக்காரர்களில் முதலாவதாக கலைஞரையும்,அடுத்து ஆதித்தனார்,நாவலர் ஆகியோரையும் கேட்டு எழுதியுள்ளார்.

இந்தத் தகவலை இங்கே குறிப்பிட காரணம்,அறிவுசீவி ஒருவரின் அழிச்சாட்டியம். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை ஒன்று காலச்சுவடு இதழில் வெளிவந்தது.அந்தக்கட்டுரையில் ஓரிடத்தில் கூட கலைஞர் பெயர் குறிப்பிடப்படவில்லை.அண்ணாவின் வாழ்க்கையிலும்,திமுகவின் வரலாற்றிலும் கலைஞர் பெயர் குறிப்பிடாமல் கட்டுரை வரையும் போட்டி காலச்சுவடு நடத்தியதா என்று தெரியவில்லை.கட்டுரையாளருக்கு ஏன் கலைஞர் மீது இப்படி ஒரு காழ்ப்பு?.

சோற்றுக்கு சிங்கியடித்து,பிள்ளைகுட்டிகளை தவிக்கவிட்டுவிட்டு,கடைசியில் அனாதையாக சாவதே நல்ல தலைவனின் இலக்கணமாக ஒரு கருத்தாக்கம் நம்மை அறியாமலே நாம் உருவாக்கிக்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.இத்தகைய தியாகங்கள் செய்யாததால் கலைஞர் ஒரு சாராரால் வெறுக்கப்படுகிறார் என்றும் எண்ண வேண்டியுள்ளது.

கடவுளே , திராவிடர்களிடமிருந்து கலைஞரைக் காப்பாற்று,ஆரியர்களை அவரே பார்த்துக்கொள்வார் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் இக்கட்டான நிலைக்கும் நம்மை கொண்டுவந்துவிட்டார்கள் இந்தக்காழ்ப்பாளர்கள்.
படத்திற்கு நன்றி: சண்டே இந்தியன் இதழ்

Friday, May 22, 2009

விசயகாந்த் வேதனை அறிக்கை.

//இந்தியாவின் மக்கள்தொகை 110 கோடி.தமிழ்நாட்டு மக்கள் தொகை 8 கோடி. மொத்த மக்கள்தொகையில் தமிழர்கள் 8 சதவீதம்.மத்தியில் அமையப்போகும் அரசின் அமைச்சர்கள் எண்ணிக்கை 80. தமிழ்நாட்டின் பங்கு 8 சதவீதப்படி 6.5 தமிழகத்திற்கு கிடைக்கவேண்டும்.தமிழக காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கியது போக 4.5 இடங்கள் தான் திமுகவிற்கு கொடுக்கப்படவேண்டும். ஆனால் திமுக தலைவரோ 7 இடங்களுக்கும் அதிகமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.இதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கும் சவால் விடுகிறார்.இந்தப்போக்கை காங்கிரசுக்கட்சி அனுமதிக்கக்கூடாது.//

இவ்வாறு விசயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்தக்கருத்தை சோ வரவேற்றிருக்கிறார்.

Sunday, May 17, 2009

இந்தியா பிழைத்தது

செல்லும் வழியெங்கும் நச்சுக்கிருமிகளை விதைத்துச்செல்லும் நடமாடும் பிணம் அத்வானி ,பிரதமர் ஆகும் அபாயத்திலிருந்து நாடு தப்பித்துள்ளது.ஏற்கெனவே அத்வானியால் செலுத்தப்பட்ட நச்சுக்கிருமிகளால் ,இந்திய மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருந்தது,அதனால் இந்தமுறை கிருமிகளால் பெரிய பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.செயலலிதாவை பா.ச.க உடன் சேர விடாமல் ஏதோ ஒரு வகையில் தடுத்துதவிய கம்முனிச்சுடு தலைவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.123 ஒப்பந்தம் என்று யாருக்குமே புரியாத ஒரு விசயத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்த கம்முனிகளுக்கு மரண அடி.

//கலைங்ஞேன் என்ன குறை வச்சான் இவய்ங்களுக்கு,ரெண்டு,மூனு சீட்டுக்கு அந்தம்மா முன்னாடி போயி கையக்கட்டிக்கிட்டு , நிக்கிறாய்ங்க,வெக்கங்கெட்டவய்ங்க. 123 ஒப்பந்தம்,அணுஆயுதம் ஒப்பந்தம்,அதுக்காகத்தான் விலகுனோம் அப்படின்னு மேடை போட்டு பேசுனா எவனுக்காச்சும் வெளங்குமா, தோப்போம்னு தெரிஞ்சே மதுரையே கேட்டு வாங்கியாந்திருக்காய்ங்க, வெட்டிப்பயலுக,அதனால தான் தேர்தல் வேலைக்கே போகல// பத்து நாட்களுக்கு முன் மதுரை வேட்பாளர் மோகன் பிரச்சாரக்கூட்டத்தை கடந்து செல்கையில் ஆட்டோக்கார மார்க்சியர் புலம்பியது தான் இது.

ரத்னேஷ் அவர்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள படி திமுக,காங்கிரசு கூட்டணி சென்ற தேர்தலில் பெற்றிருந்த பலத்தை விட இம்முறை அதிகமாகவே பெற்றுள்ளது.ஒட்டுண்ணியான பாமக இல்லாததால் திமுகவிற்கு இன்னும் அதிக செல்வாக்கு மத்திய அரசிலே ஏற்படும். சுதந்திர இந்தியாவில் ,தமிழகத்தின் பொற்காலம் கடந்த ஐந்தாண்டுகள் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.இனியும் அப்படி ஒருகாலம் வருமா என்று மனக்கிலேசம் அடைந்திருந்தேன்,ஆனால் அதையும் விட அருமையான பொற்காலம் இனிமேல் தான் இருக்கிறது.இதையெல்லாம் சாதித்துக்காட்டிய கலைஞருக்கு தமிழினம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.கேவலமான அவதூறுகள்,பழிச்சொற்கள்,அபாண்டமான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டு ‘பாம்பு கடித்தால் திருப்பியா கடிக்கமுடியும்’ என்று கடந்து போன கலைஞரை புரிந்துகொண்டு அவருக்கான மரியாதையை அளித்துள்ளனர் மக்கள்.
தமிழினத்தலைவர் என்று மதிக்கப்படும் கலைஞர் மேல் காழ்ப்புகொண்டு நெடுமாறன்,ராமதாசு போன்றவர்கள் செய்த கேடுகெட்ட மொள்ளமாரித்தனங்கள் , இன்று அவர்களையே மூட்டைப்பூச்சியைப் போல் நசுக்குவது நசுக்கியுள்ளன.இப்போது வைகோ வரிசையில் இவர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் விசயகாந்தின் வரவு வைகோவுக்கு சாவுமணி அடித்தது,இந்தத்தேர்தலில் மருத்துவர் அய்யாவுக்கும் அடித்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் நலத்திட்டங்கள்,வளர்ச்சிப்பணிகள் போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஈழப்பிரச்சினையை வைத்து கலைஞரைக் கேவலப்படுத்திய
அறிவுசீவிகள்,உணர்வாளர்கள்,இணைய புரட்சியாளர்கள்,அனைவரும் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.
“தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது” .

Wednesday, February 4, 2009

ஏன் நான் கலைஞர் ஆதரவாளனாக இருக்கிறேன்?

மு.கு:சென்ற மாதம் 25ஆம் தேதியில் இந்தப்பதிவை எழுதி. அப்போது இருந்த கலைஞர் எதிர்ப்பு சூழ்நிலையால் வெளியிடாமல் வைத்திருந்தேன்.அப்போது இருந்த தயக்கம் இப்போது இல்லை.


மத்திய அரசே, தமிழகத்திற்கு கேபினட் அந்தஸ்து மந்திரி கொடுஎன்று தமிழக நகரங்களின் சுவர்களில் கதறும் வாசகங்களை இருபது ஆண்டுகளுக்கு முன் பார்த்திருப்போம்.மத்திய அரசின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதே கனவாக இருந்த ஒரு காலத்தில் அக்கனவை நனவாக்க திராவிட இயக்கத்தலைவர்கள் செய்த தியாகமும்,ஆற்றிய உழைப்பும் அளவிடற்கரியது. இனவுணர்வையும்,மொழியுணர்வையும் மக்களுக்கு ஊட்டி வளர்த்து, ஒன்று திரட்டி தமிழகத்திற்கு தேவையானதை சாதித்துக்கொள்ளும் ஆற்றல் , கலைஞரை விட்டால் வேறு யாருக்கு இருந்திருக்கும்.

இலங்கையில் நடக்கும் தமிழினப்படுகொலையை சாக்காக வைத்து கலைஞர் மீது காழ்ப்பை வெளிப்படுத்தும் போக்கு தமிழின ஆ ர்வலர்களிடையே தீவிரமாக வளர்ந்து வருகிறது.சிங்கள அரசுடன் போரிட்டு வெல்லும் வாய்ப்பு ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதில் பத்தில் ஒரு பங்கு வாய்ப்பு கூட இந்திய அரசை எதிர்த்து நின்றால் இந்தியத்தமிழர்களுக்கு இருக்காது.இந்த உண்மையை உணர்ந்து அண்ணா தனிநாடு கோரிக்கையை கைவிட்டார்.பின்னால் தமிழகத்தின் அதிகாரத்தைப் பிடித்ததும், இப்போது இந்திய அரசிலே மதிப்புமிக்க இடத்தைப் பெற்றிருப்பதும் செயலலிதாவின் நாடகத்தனமான சாதனை போன்றது அல்ல.பெற்றிருக்கும் அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித்திட்டங்களைப் பெறுவதில் மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு கலைஞரின் செயல்கள் இருக்கின்றன. இதற்குத்தான் கலைஞரை நம்புகிறோம்.இதை விட்டுவிட்டு ஈழப்பிரச்சினையில் தானே வலியச்சென்று பலியாடு ஆக வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

திருமா,சீமான் போன்ற இளந்தலைவர்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படமாட்டோம் என்று காட்டினாலும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.அது தலைவிதி.அப்படி உட்பட்டு என்ன செய்யமுடியுமோ அதைவிட அதிகமாகவே செயலாற்றுகிறார் கலைஞர்.

கலைஞர் குடும்பத்தினர் அரசியலில் நுழைவது பலரின் கண்களை உறுத்துகிறது.வாரன் பபெட் போன்ற வள்ளல்களுக்கே அதைக் கேள்விகேட்கும் அருகதை உள்ளது.மட்டுமின்றி செயா போன்ற நாலாந்தர நாரீமணிகளிடம் அரசியல் செய்ய அண்ணன் அழகிரி பாணியும் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்.

கலைஞரின் போராட்டகுணமும்,ஆதிக்கத்திற்கு அடிபணியாத தன்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.இந்திராவின் அவசர நிலைப்பிரகடனத்தை எதிர்த்து நின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு,அதனால் ஒருமுறை ஆட்சி கலைக்கப்பட்டது.அடுத்து ஈழத்தமிழருக்கு காட்டிய ஆதரவால் இன்னொரு முறை அவரது ஆட்சி காவு வாங்கப்பட்டது.ஆனால் மண்டல் கமிசன் பிரச்சினையால் கலைக்கப்பட்டதாக புதுக்கதை புனையப்படுகிறது.செயா,சு.சாமி,வெங்கட்ராமன் போன்ற தமிழ் எதிரிகளால் சட்டம்,ஒழுங்கு பிரச்சினை காரணம் காட்டி ஆட்சி கலைக்கப்பட்டது.செயாவைக் கண்டிக்க வக்கில்லாமல் கலைஞரின் மீது பாய்ந்து பிறாண்டுவதின் உளவியலை புரிந்துகொள்ள இயலவில்லை.

Saturday, January 10, 2009

புத்தாண்டின் புத்தம்புது முடிவு

தருமி அய்யா சாலியாக ஒரு பதிவு இட்டுள்ளார் , அதன் தொடர்ச்சியாக இந்தப்பதிவு.2008ன் இறுதி நாளில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் நான்,தருமி அய்யா,சீனா அய்யா, டிபிசிடி, மற்றும் சோலைஅழகுபுரம் பாலா ஆகியோர் கலந்து கொண்டோம். பிரபு ராஜதுரை அவர்களை ஆட்கொணர்வு மனு போட்டு தான் அடுத்தமுறை வரவைக்க வேண்டும்.மண்டல் கமிசன் பற்றி பேச்சு வந்த போது சந்திரமுகி சோதிகா மாதிரி திடீரென்று மாறிவிட்டேன்.இயக்குனர் சங்கரின் சென்டில்மேன் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து வந்ததையும்,அதன் பி்றகு அவருடைய படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணிப்பதையும் ஆவேசமாக கூறினேன்.(இந்தியன் மட்டும் கமலுக்காக பார்த்தேன்). மண்டல் கமிசனால் பலனேதும் இல்லாத சீனா அய்யா என்ன நினைப்பாரோ என்று சங்கடமாக இருந்தது. அப்பொழுதே உங்களுக்கு அவ்வளவு அறிவு இருந்ததா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய டிபிசிடி , அப்போது தான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.

பங்காருஅடிகளாரின் மகன் மதுரைக்கு வந்த போது தங்கள் வீட்டில் தங்கிய சம்பவத்தை சிறிது விளக்கினார் டிபிசிடி.அவருக்காக மற்றவர்கள் சைவச்சாப்பாடு உண்டதையும், அவர் குழுவினர் தனியறையில் அசைவ உணவை ஒரு கட்டு கட்டியதையும் கட்டுடைத்தார்.தன் காலில் விழுந்து ஆசி வாங்கியவர்களை அவர் சக்தி என்று அழைத்ததையும், காலில் விழாத தன்னை பிரதர் என்று அழைத்ததையும் சொல்லி கிச்சுகிச்சு மூட்டினார்.

லக்கி,கைப்புள்ள,சொள்ளுப்பாண்டி போன்றவர்களின் ஒட்டுமொத்தக்கலவையாக வருவார் என்று கட்டியங்கூறும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சோலைஅழகுபுரம் பாலா.பொறியாளராக பிஎசுஎன்எல்லில் பணியாற்றுகிறார்.

மாநாடு முடியும் நேரத்தில் பேச்சு சூடு பிடித்தது.தமிழ்க்கொலை புரிவதில் தவறேதுமில்லை என்னும் திடநம்பிக்கையுடன் எழுதும் போக்கைப்பற்றிய பேச்சு வந்தது.அதிர்ட்டப்பதிவரின் சமட்கிருதப்பாணி பெயரைப்பற்றியும் பேசப்பட்டது.கிரந்த எழுத்துக்களை பயன்படு்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற டிபிசிடியின் வாதத்தை மறுத்தார் தருமி அய்யா. ஜார்ஜ் என்ற தன்னுடைய பெயரை சார்சு என்றா கூற வேண்டும் என்று சொல்லி வெறுத்துப்போனார். ஏற்கெனவே வலைப்பதிவில் இந்த பெயர் விசயத்தில் ஜெயபாரதன் அய்யாவிற்கும்,நயனம் அய்யாவிற்கும் இடையே நடந்த பிரசித்தி பெற்ற சண்டை ஒன்று உள்ளது நினைவுக்கு வந்தது.பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் தானே தமிழ் வளரும் என்பது தருமி அய்யாவின் வாதம். பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன். இந்த இடத்தில் நன்னன் அய்யாவை துணைக்கு அழைத்துக்கொண்டேன்.அவரிடம் ஒருவர், 'தமிழ் என்பதை ஆங்கிலத்தில் tamil என எழுதுகிறார்களே இது சரியா?' என்று கேட்டார். அதற்கு நன்னன் அய்யா மிகவும் சரியானது தான்., அந்த மொழியில் பொருத்தமான ஒலியமைப்பு உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை.அதைப்போலவே தமிழிலும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தும் போது தமிழில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் சிறப்பு என்றும் கூறினார்.கிட்டத்தட்ட பேச்சு நிறைவடைந்து கிளம்பி விட்டோம்.

தருமி அய்யாவுக்கு இருக்கும் அதே பிரச்சினை எனக்கும் இருக்கிறது.என் மகள் ஜென்னியின் பெயரை தமிழில் எப்படி எழுதுவது என்று நீண்ட நாளாக குழம்பிக்கொண்டிருந்தேன்.மொழி என்பது ஒரு கருவி தானே ஒழிய உணர்வு ரீதியாக பொருட்படுத்தத்தேவையில்லை என்பது பகுத்தறிவாளர் பார்வை, தருமி அய்யாவின் பார்வை இத்தகையது என்று தான் நான் நினைக்கிறேன்.எனக்கும் இவ்வாறான எண்ணமே இருந்தது.ஆனாலும் ஆழ்ந்து யோசிக்கும் போது மொழியின் இசைவுக்கு மாறான எழுத்துக்களை பயன்படுத்துவது, மொழியைக் கறைப்படுத்துவதாகவே எனக்குத்தெரிகிறது.ஜீசஸை யேசு என்பதும், க்ரைஸ்ட்டை கிறிஸ்து என்பதும்,ஷங்கராச்சார்யாவை சங்கரச்சாரியார் என்பதும் தான் நம் மொழியின் இசை.ஜென்னியை தமிழில் எழுதும் போது சென்னி என எழுத இனி தயக்கமேதும் இல்லை.இப்படி ஒரு முடிவை துணிந்து(!) எடுக்கத்தூண்டுதலாயிருந்த டிபிசிடிக்கு நன்றி.

சார் என்பதை ஸார் என்று எழுதும் உண்மைத்தமிழன் போன்றவர்கள் இந்தப்பதிவைப்படித்தால் கைகொட்டிச்சிரிப்பது உறுதி.

பி.கு:
மெய்யாலுமே கடைசி வரியை எழுதியவுடன் தருமி அய்யாவின் பதிவு முகவரியை தெரிந்துகொள்ள அங்கு சென்றால் , பின்னூட்டத்தில் உ.தமிழன் அங்கலாய்த்திருக்கிறார்.கொடுமையோ கொடுமை.

Thursday, November 27, 2008

இலங்கைக்கு ஒரு பண்டாரநாயகே,இந்தியாவுக்கு ஒரு அத்வானி.

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தந்தை சாலமன் பண்டாரநாயகே தான் இன்று இலங்கை பற்றி எரியக்கொள்ளி வைத்தவர்.ஆட்சியைப்பிடிக்கும் அதிகாரவெறியில் 'சிங்களா ஒன்லி' என்ற முழக்கத்தோடு சிங்கள மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தினார்.ஆட்சியையும் பிடித்தார்,சிங்களம் தான் ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த உடனேயே தமிழர்களின் எதிர்ப்பும் ஆரம்பித்தது.தங்களுடைய உரிமைகளும்,சுயமரியாதையும் பறிபோக ஆரம்பித்தவுடன் ஜனநாயக ரீதியில் போராட ஆரம்பித்தனர் தமிழர்கள். இராணுவ பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்க முனைந்த ஆரம்பித்த அதேகணத்தில் கொழும்பில் குண்டுவெடிக்க ஆரம்பித்தது.இன்றுவரை தொடர்கிறது. உலகின் உல்லாசபுரியாக இருந்திருக்க வேண்டிய நாடு , இன்று உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் ஓட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்தியாவிலும் ஒரு பண்டாரநாயகா இருக்கிறார்.அவர் பெயர் அத்வானி.இந்த நடமாடும் பிணத்தின் நாசகார சிந்தனைகளால் இந்தியா இன்று தாங்கொணா இன்னல்களை அனுபவித்து வருகிறது.சாதியால் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் வாழவகை செய்யும் மண்டல் கமிசனை அமுல்படுத்த வி.பி.சிங் அரசு முயன்ற போது அத்வானியின் உள்ளிருக்கும் சாத்தான் விழித்தது. பிராமணர்களுக்கு சமமாக மற்றவர்களும் வருவதா? அது இந்து மத தர்மத்திற்கு விரோமானதாயிற்றே? என்றெல்லாம் சிந்தித்து அந்த மண்டல் கமிசனை இல்லாது ஒழிக்க திட்டம் தீட்டினார்.அந்த திட்டத்திற்கு கிடைத்த பலியாடு, முஸ்லிம் மக்கள். பத்துபைசா பிரயோஜனம் இல்லாத பாபர் மசூதியை உடைத்த பொழுது இந்தியா என்னும் நாட்டை தான் நாம் உடைக்கப்போகிறோம் என்பதை அவர் உணரவில்லை.

பேரினவாதம்,மதவாதம் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவன் விரலைச்சூப்பிக்கொண்டா உட்கார்ந்திருப்பான்.காயம்பட்ட அவனது மனது எந்த ஒருகொடூர செயலையும் செய்ய துணிந்து விடுகிறது.எந்த ஒரு குற்றத்திற்கும் மோட்டிவ் (motive) ஒன்று உண்டு.இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு மோட்டிவ், அத்வானி அன்கோ தான் என்று கண்ணை மூடிக்கொண்டு கை காட்டலாம்.

அத்வானி மட்டுமல்ல அவர்தம் கொள்கைகளும் நடமாடும் பிணம் தான்.அந்தப்பிணங்களுக்கு மக்கள் என்றைக்கு சமாதி கட்டுகிறார்களோ அன்றைக்கு தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.

பி.கு:
இன உணர்வு,மொழியுணர்வை தூண்டி தான் திமுக முன்னோடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.ஆனால் எக்காலத்திலும் அவர்கள் பார்ப்பனர்கள் மேல் வன்முறையை ஏவிவிடவில்லை.அதற்குக்காரணம் இயல்பிலேயே அமைந்த தமிழனின் பரந்த மனப்பான்மையும், திராவிட இயக்கத்தலைவர்களின் எண்ணங்களை ஆளுமை செய்த காந்தியடிகளும் தான்.

Wednesday, November 26, 2008

சீனு அவர்களுக்கு பகிரங்க தந்தி

//சீனு said...
ம்ம்...அந்த நானூறு கோடிய உங்க கிட்ட கொடுத்திருந்தா என்ன புடுங்கியிருப்பீங்க? 350 கோடிய சுருட்டிட்டு 5 கோடியில பேருக்கு நலத்திட்ட உதவிங்கிற பேருல அதுலயும் கொள்ளை அடிச்சிருப்பீங்க.//

இந்தியா என்னும் மாட்டுக்கொட்டடியில் இருந்து எதையும் பிடுங்க முடியாது.தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் மதிப்புக்குறையாத வண்ணம் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.இப்போதும் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.முற்போக்கு எண்ணங்கொண்ட திராவிட இயக்கத்தலைவர்களே அதற்குக் காரணம்.

//காயடித்தால் மட்டும் போதாது. வீதியில் கட்டி வைத்து சாகும் வரை சவுக்கால் அடிக்க வேண்டும்.//

அனானி, மனிதநேயம் என்பதற்கு முன்னால் தேசியம்,தேசபக்தி என்பது எல்லாம் அவற்றின் மீது ஒன்னுக்கடிக்க கூட தகுதியில்லாதவை . உங்களைப் போன்ற ஆசாமிகளை கழுவில் ஏற்றினால் தான் நாடு விளங்கும்.

முற்போக்காளரையும் விஞ்சிய அதிமுற்போக்காளர்களுக்கு இந்தச்சுட்டி .
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=532

About Me

My Photo
சாலிசம்பர்
View my complete profile

இது தான்டா 'சாலி

இது தான்டா   \
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்