கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, September 29, 2007

கட்டற்ற கொடுமை

உங்களுக்கு கொடுமையாக தோன்றுவது மற்றவருக்கு இனிமையாக தோன்றலாம்.

மற்றவருக்கு கொடுமையாக தோன்றுவது உங்களுக்கு இனிமையாக தோன்றலாம்.

தன்னை உயர்சாதியென கருதிக்கொள்ளும் நண்பன் ஒருவன் எனக்கு இருக்கிறான்.எப்போதுமே கலைஞரை ஒரு அல்பன் என்றே குறிப்பிட்டு பேசுவான்.தான் காதலித்து கரம் பிடித்த மனைவியைப் பற்றி ஒருமுறை என்னிடம் பேசும் போது சாதியில் ஒருபடி தன்னை விட கீழானவள் என்று குறிப்பிட்டு பேசினான்.

கலைஞரை அற்பன் என்று என்று குறிப்பிடும் இவன் அற்பனிலும் அற்பனாக இருக்கின்றானே என்று நினைத்துக் கொண்டேன்.

இவனுடைய பார்வையில் கலைஞர் அற்பமாக தோன்றுகிறார்.கலைஞருடைய பார்வையில் இவன் எப்படி தோற்றமளிப்பான்?கடையனுக்கும் கடையனாகத் தான் தோற்றமளிப்பான்.

இதை ஒரு பின்னூட்டமாக சுப்பையா வாத்தியார் அவர்களின் பதிவிலே இன்று இட்டேன்.இன்னும் வெளியிடவில்லை.அவ்வளவு கொடுமையாகவா இது இருக்கிறது?


2 comments:

said...

Liberal attitude should come to every human being mind to remove those thoughts

said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சதுக்கபூதம்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்