கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, September 28, 2007

கடவுள் நம்பிக்கை

எனக்குத் தெரிந்த ஒரு ஈனப்பிறவி இருக்கிறான்.அவனுடைய மகன் திருமணத்திற்கு பெண் வீட்டார் பத்திரிக்கையின் ப்ரூஃப் கொடுத்து சரி பார்க்க சொல்கிறார்கள்.அங்காள ஈஸ்வரி துணை என்று இருந்ததை அங்காளபரமேஸ்வரி துணை என்று மாற்றினான் அந்த ஆன்மிகவாதி.இவருடைய ஆன்மிகத்தின் தரத்தை என்னவென்று சொல்ல?

இங்கே இவருடைய கடவுள் நம்பிக்கையா வெளிப்படுகிறது?இல்லை,அவருடைய அகந்தையும்,அசட்டு
நம்பிக்கையும் தான் வெளிப்படுகிறது.

பெரும்பாலான கடவுள் பக்தர்களின் நிலை இதுதான்.தாங்கள் நம்புவதைத் தான் கடவுள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.அதே நேரம் அடுத்தவனின் கடவுளை இவர்கள் கடவுளாகவே மதிப்பதில்லை.

கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த விசயம் என்கிறார்கள்.தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதா நம்பிக்கை.உடன்கட்டை ஏறுவது கடவுளுக்குப் பிடித்தமானது என்று நம்பினார்கள்.பெண்களை பொட்டுக் கட்டி விடுவது கூட நல்லது தான் என்று நம்பினார்கள்.இப்போதும் அப்படி நம்பமுடியுமா?.இந்த நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டதால் இறைவன் நம்மை தண்டித்துவிட்டாரா என்ன?.

கோவில் கூடாது என்பதல்ல;கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடடது என்பது தான் நம் கொள்கை.இப்போது ராமர் பாலம் என்று ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு மக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்தை கொடியவர்கள் என்பதா?கோமாளிகள் என்பதா?ராமர்பாலம் போன்ற மணல்திட்டுகள் உலகம் முழுவதும் உள்ளன,அங்கெல்லாம் போய் இது ராமர்பாலம் என்று சொல்லமுடியுமா?சொன்னால் பிடித்து பைத்தியக்கார விடுதியிலே அடைத்துவிடுவார்கள்.

நம்பிக்கையா?அறிவா?என்று வரும்பொழுது நான் அறிவின் பக்கம் தான் நிற்பேன் என்று காந்தி சொன்னார்.

சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் இயங்குகின்றன என்பது அறிவு.பூமியைச் சுற்றி சூரியன் முதலான ஒன்பது கோள்கள் இயங்குகின்றன என்பது நம்பிக்கை.இந்த நம்பிக்கையை வளர்த்தெடுப்பது தான் அறிவா?

இந்த மதநம்பிக்கைகளிலிருந்து சிறிது விலகியதாலேயே மேற்கத்தியினர் இன்று உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

மத நம்பிக்கையே ஒருவனை வாழவைக்கும் என்றால் இந்தியா ஏன் இன்னும் ஏழைநாடாக இருக்கிறது?இங்கு இருக்கும் 95% மக்கள் சிறந்த பக்திமான்கள் தான்.

முன்னேறியவர்கள் எல்லாம் தங்களுடைய உழைப்பாலும்,அறிவினாலும்,தன்னம்பிக்கையினாலும் தான் என்பதை உணர்ந்து அதை அடுத்தவர்களுக்கும் போதித்தால் அது ஆக்கபூர்வமாக இருக்கும்.

அதைவிடுத்து அவர்களுக்கு கடவுள் நம்பிக்கையை ஊட்டுவது என்பது அவர்களை தொடர்ந்து மடமையில் வைத்திருக்க செய்யப்படும் கயமைத்தனம் தான்.

0 comments:

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்