கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, July 19, 2007

தன்னைதானே மெச்சிக்கொள்ளும் தவிட்டுக் கொழுக்கட்டை

//என்.கணேசன் சென்னையிலிருந்து எழுதுகிறார்:-அண்மைக்காலத்தில் இடஒதுக்கீடு பற்றி அடிக்கடி செய்திகள் அடிபடுகின்றன.வேலை வாய்ப்புகளில் தகுதிகள் இருந்தும் திறமைகள் இருந்தும் ஒரு சிலர் பாதிக்கப்படுகின்றனர்.இனி உள்நாட்டில் முயற்சிப்பதில் பலனில்லை என அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலியா போன்று வெளிநாடுகளில் முயற்சி செய்து வெற்றியும் பெறுகின்றனர்.மாம்பலம்,தி.நகர்,போன்ற பகுதிகளில் வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிவதைக் காணமுடிகிறது.இது எந்த விதத்தில் நியாயம்?இதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?ஐ.நா, மூலமாக அமெரிக்கா,பிரிட்டன் நாடுகளுக்கு மத்திய அரசின் மூலம் தாக்கீது அனுப்பலாம்.ஜாதிவாரி கோட்டா ஒன்றை அனுப்பி,'எங்கள் நாட்டு ஆசாமிகள் விஷயத்தில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி வேலை கொடுங்கள்' என வலியுறுத்தலாம்.இதனால்,சமூகநீதி காக்கப்படும் என்பது எனது தாழ்மையான கருத்து.இதை யாரும் ஏன் முயற்சிக்கவில்லை.//

மேற்கண்ட கருத்தை இன்றைய தினமலத்தில் (19-7-07) இது உங்கள் இடம் பகுதியில் எழுதியுள்ளார் ஒரு வாசகர்.

தங்கள் திறமையை எல்லாம் உள்நாட்டிலேயே காட்டி தாய்நாட்டுக்கு தியாகம் செய்ய தயாராக இருந்தது போலவும்,வேறு வழியில்லாததாலேயே வேறு நாட்டில் பணி செய்வதாகவும் நொந்து கொண்டுள்ளார்.வெளிநாடுகளில் இருப்பவர்கள் அனைவருமே மாம்பலம்,தி.நகர் பகுதிகளில் இருந்து சென்றவர்களா என்ன?.

இதைவிட கூத்து,வெளிநாடுகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என போராட வேண்டியது தானே என்று சொல்கிறார்.அதாவது இடஒதுக்கீடை கேலி செய்கிறாராம்.
தகுதி,திறமை என்று மட்டுமே இருந்தால் அவர்களை விஞ்ச முடியாதாம்.

இப்படி பேசுபவர்கள் முகத்தில் கரி பூசும் விதமாகத் தானே
இந்த வருட மருத்துவகல்லூரி தரவரிசைப் பட்டியலில் நூற்றுக்கு எண்பது பேர் B.C,S.C பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தானே உயர்ந்தவன் என்று பழங்காலத்திலிருந்தே பாடிய பாட்டால் தானே இன்று ஆரிய,திராவிட பிரச்சினை;இடஒதுக்கீடு பிரச்சினை என்று பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இப்போதும் இந்தப்பாட்டை பாடும் இந்த கணேசன் 40 வருடங்களாக கோமாவில் இருந்து இப்போது தான் சுயநினைவு திரும்பிய ஒரு பெருந்தகையாகத் தான் இருக்க முடியும்.

2 comments:

said...

இதே கடிதம் திருச்சி எடிஷனில் "எம்.நாராயணன், திருவெறும்பூர்" என்ற பெயரில் வெளிவரும் :-)

தினமலம் காலம் காலமாக செய்துகொண்டிருக்கும் வேலைதானே இது?

said...

//தினமலம் காலம் காலமாக செய்துகொண்டிருக்கும் வேலைதானே இது? //

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
என்று புலம்ப வைத்து விட்டார்களே லக்கிபாஸ்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்