




வாய் பிளக்க வைக்கும் மனிதனின் மகத்தான சாதனை. இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம், உலகின் உயரமான பாலம்.பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை பார்க்கும் போது வெள்ளைக்காரன்,வெள்ளைக்காரன் தான்யா என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.இந்தியாவுடன் ஒப்பிடும் போது பிரான்ஸ் ஒரு துக்கடா நாடு.அவர்களால் எப்படி இதை செய்து காட்ட முடிந்தது? அங்கே மனிதகுல வளர்ச்சிக்கு கடவுளை நம்புவதை விட அறிவியலையும்,தொழில்நுட்பத்தையும் நம்புகிறார்கள்.ஆனால் இங்கேயோ அறிவியலை நம்புவதை விட கடவுளை நம்புவது தான் சிறப்பானதாக கருதப்படுகிறது, மேலும் கடவுளிடம் பிச்சையெடுப்பதே ஆகச்சிறந்த ஆன்மீகமாகவும் கருதப்படுகிறது.மக்களின் மதவுணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ளும் குள்ளநரிகளும்,பன்றிப்பிறவிகளும் நிறைந்துள்ள நம்நாடு கடைத்தேற ஏதாவது வழியுள்ளதா?
அதற்கு கலைஞரைப்போன்ற பகுத்தறியும் திறனும்,நிர்வாகத்திறமையும் அமையப்பெற்ற தலைமை இந்திய அளவில் தோன்ற வேண்டும். ஆன்மீகக் குள்ளர்கள் நிறைந்த நம்நாடு போக வேண்டிய தொலைவு வெகுதூரம். இக்குள்ளர்கள் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை , வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போடாமலிருந்தாலே நாடு வளம்பெறும்.இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கும்படி என் அப்பன் பிரிடேட்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.