கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, October 30, 2008

திருவாட்டி ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டாமென செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இறுதி எச்சரிக்கை. செல்வி, நீ உன் வேலையை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு இருக்கவும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் பற்றி தமிழ்நாட்டில் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். உன் நன்மைக்காக வேண்டி எச்சரிக்கிறோம்.

அம்மணி நீ தேவையில்லாமல் விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அல்லது மூக்கு நுழைத்தால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும் என்பதை உனக்கு இறுதியாக உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கிறது.

உனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறோம். இனி வரும் காலத்தில் உன் செயல்பாட்டில் எந்த ஒரு மாற்றமில்லை என்றால் பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் வரும்.

தமிழ் இனத்தோடும், தமிழர் உணர்வோடும் நீ மோதாதே! நெருப்போடு விளையாடதே!. எரிந்து சாம்பலாகிப் போவாய் என்பதை இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம். இது வெறும் மிரட்டல் அல்ல.
எங்களின் ஆற்றல் மிக்க மன உறுதியின் வெளிப்பாடு, எங்கள் ஆதங்கம் உனக்கு புரிந்தால் சரி. புலிகளின் தாகம் தனி தாயகம். இதுதான் எம்மக்களின் வேட்கை. இதை தடைபோட எவர் நினைத்தாலும் அவர்களை அழிக்க நாங்கள் தயங்கமாட்டோம்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஏமாந்த அதிமுக கட்சிக்காரர்களுக்கு தலைவியாக நீ இருந்து கொண்டும், சில ஏமாளித் தமிழர்களுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும், உலக அரசியல் நடப்புத் தெரியாத தமிழ் உணர்வு இல்லாதவர்களுக்கும் நீ தலைவியாக இருந்து கொண்டும் அரசியல் நடத்தி பிழைத்துக்கொள். நீயொரு கன்னடப் பெண்மணி.

வெறும் பகட்டுக்கும், பணத்திற்கும், பதவிக்கும் வேண்டி உன்னிடம் ஒரு அடிமையைப் போல் இன உணர்வு அற்று சில தமிழர்கள் உனக்கு விசுவாசமாக இருக்கலாம். அதற்காக வேண்டி மொத்த தமிழ்நாடே உனக்கு அடிமையென்று எண்ணிவிடாதே. இறுமாப்புக் கொள்ளாதே! கர்வம் கொள்ளாதே.

எங்களைப் பொறுத்தவரை நீயொரு நடிகை. அரசியல் பொது வாழ்விலும், உன் நடிப்பும் உலகுக்கு தெரிகிறது. உலக அரசியல் வரலாற்றில் வீராவேசம் பேசியவர்கள் வாழ்ந்ததில்லை. மீண்டும் எச்சரிக்கிறோம், இலங்கையில் தன் இனம் காக்கவும், தன் சொந்த மண்ணின் உரிமைக்காக போராடும் தமிழ் ஈழ போராட்டவாதிகளின் உண்மை உணர்வை எழுச்சியை, உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாதே!.

விடுதலைப் புலிகளின் தனி ஈழம் கொள்கையை உன்னைப் போன்று ஆயிரமாயிரம் முதல்மைச்சர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த இயலாது. கட்டுப்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகளை நேசிக்கும் அல்லது ஆதரிக்கும் அல்லது தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் உலகில் வாழும் 75 நாடுகளில், 6 கோடிக்கு மேல் தமிழர்கள், அதாவது தமிழ்நாட்டையும் சேர்த்து இருக்கிறார்கள். அதற்காக வேண்டி நிதி உதவி செய்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா? இதுவே உனக்கு இறுதி எச்சரிக்கை. உன்னை இறுதி யாத்திரைக்கு அனுப்ப எங்களுக்கு அதிக நேரமில்லை. அதிக காலம் தேவையில்லை. நீயொரு பெண் என்பதற்காக வேண்டி இவ்வளவு காலம் பொறுமையாகக் கடைப்பிடித்தோம்.

இதற்குமேல் நடப்பதை யார் அறிவார்? விடுதலைப் புலிகளை உலகில் யார் அழிக்க நினைத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் சரி, அத்தகையவர்களை நாங்கள் அழிக்கத் தயங்க மாட்டோம் என்பது உண்மை.

எங்கள் போராட்டத்திற்கு முன்னால் நீயொரு தூசி. தமிழன் என்றொரு தனி இனம். அவன் குணமும் தனி என்பதை உணர்ந்து உன் தவற்றை இனிமேல் திருத்திக்கொள்.


நன்றி-thatstamil.com
மேலே உள்ள கடிதம் தமிழ்மைந்தன் என்பவரால் எழுதப்பட்டு மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.திருவாட்டி என்ற புதிய சொல் அறிமுகத்திற்காக நன்றியும், வன்முறை நிறைந்த கடிதத்திற்கு கண்டனமும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, October 28, 2008

வல்லவனுக்கு வல்லவன் - II

காலங்காலமாக பல்வேறு ஊடகங்கள் மூலம் காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற செய்தி நமது மூளையில் பதிக்கப்பட்டுள்ளது. சிங்கம் கிட்டத்தட்ட எல்லா மிருகங்களையும் தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. அப்பேர்ப்பட்ட சிங்கத்தை அரண்டு ஓட வைத்த சின்னவன் ஒருவனைப்பற்றிய சிறு குறிப்பு தான் இது. அவன் பெயர் பெரும்புள்ளிப்பல்லியன்(Large grain lizard). எண்ணூறு கிலோ எடையுள்ள காட்டெருமை ஒன்றை நான்கு சிங்கங்கள் சேர்ந்து வீழ்த்திக்கொன்று விட்டன.அதன் வயிற்றைக்கிழித்து உருப்படியாக இரண்டு வாய் கூட சாப்பிட்டிருக்காது அந்த சிங்கங்கள், வந்துவிட்டான் பெரும்புள்ளிப்பல்லியன்.

இரண்டடி நீளத்தில் பத்துப்பதினைந்து கிலோ எடை கூட தேறாத அவனைப்பார்த்ததுமே சிங்கங்கள் கிலியாகிவிட்டன.நிமிர்ந்த நடையும்,நேர்கொண்ட பார்வையுமாக வருபவனை விரட்டும் முயற்சியில் இறங்கின சிங்கங்கள்.சுற்றிச்சுற்றி வரத்தான் முடிந்ததே தவிர அவனுடைய முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை.நிதானமாக ஒவ்வொரு அடியாக முன்னேறிக்கொண்டிருக்கிறான் பல்லியன். மூன்று சிங்கங்கள் விரட்டும் முயற்சியைக்கைவிட்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன. ஒரு சிங்கம் மட்டும் தைரியத்தை இழக்காமல் களத்தில் இருந்தது.பயப்படும் அறிகுறி பல்லியிடம் இல்லை.ஒரு அடி முன்னால் வந்து உறுமிக்காட்டுவதும் இரண்டு அடி பின்னால் ஓடுவதுமாக சிங்கத்தின் நிலை பரிதாபமாக ஆகிக்கொண்டிருந்தது.பின்னணியில் போடா போடா புண்ணாக்கு பாட்டு ஒன்று பாடாதது தான் குறை. இறுதியில் பல்லி வென்றே விட்டது,மிச்சமிருந்த சிங்கமும் வாலைச்சுருட்டிக்கொண்டு பங்காளிகளுடன் போய் சேர்ந்து கொண்டது.நான்கு சிங்கங்களின் பாதுகாப்பு அரணோடு பல்லியன், எருமையின் மீதேறி வயிற்றுக்குள் தலையைவிட்டு சாப்பிட ஆரம்பித்ததைப் பார்க்கும் யாவரும் வாயைப்பிளக்காமல் இருக்கமுடியாது.

கொடிய விசமுள்ள நாகப்பாம்பும் கூட பல்லியின் முன் மண்டியிடுகிறது.நாகத்தை நார்நாராகக்கிழித்துத் தொங்கவிடும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.காட்டுராஜா சிங்கம் என்பதை மீள்பரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது.
நன்றி-டிஸ்கவரி சேனல்
வல்லவனுக்கு வல்லவன் - I

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்