கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, December 26, 2007

மோதி vs கலைஞர்


சிறுபான்மை முஸ்லிம்களை எதிர்த்து அரசியல்
செய்யும் மோதியும் , சிறுபான்மை பார்ப்பனர்களை எதிர்த்து அரசியல் செய்யும் கலைஞரும் ஒன்று தானா?

தங்களுடைய ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு கண் , காது ஒட்டவைத்து ஈறைப் பேனாக்கி,பேனைப் பெருமாளாக்கி அதை வைத்து அரசியல் செய்வது உலகம் முழுவதுமுள்ள
அரசியல் , ஆதிக்கவெறியர்களின் வேலை தான்.

ஆனால் பிஜேபியின் கேடுகெட்ட அரசியல் வி.பி.சிங் தலைமையிலான மாபெரும் எழுச்சியை சகிக்க முடியாமல் ஆரம்பமானது.இந்து,சந்து என்று முழக்கமிடும் பி.ஜே.பி அதே இந்துக்களின் நலன் காக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்துவதை தடுக்கும் நோக்கிலேயே ராமர் கோயில் பிரச்சினையைக் கையில் எடுத்தது.

அவர்களே அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் இப்படியொரு ஆதரவை இந்திய மக்கள் தருவார்கள் என்று.சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் கடன் வாங்கி காவடி தூக்கும் மக்கள் நிறைந்த இந்தியாவில் அவர்களுக்கும் இடம் கிடைத்தது.

முஸ்லிம் என்ற ஒரு பொது எதிரியை உருவாக்கி இந்து வெறியை வென்றெடுத்துள்ளது பி.ஜே.பி.
இதற்காக அவ்வப்போது முஸ்லிம்கள் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.அதிகம் பலி கொடுத்தால் அதிகம் பலன் கிடைக்கும். இதை நன்றாகவே புரிந்து கொண்டார் மோதி.

இந்த கேவல அரசியலுக்கும் கலைஞருக்கும் முடிச்சுப் போடுகின்றனர் சில கேவல பிறவிகள்.தமிழ்நாட்டில் இதுவரை எந்த பிராமணரும் கொல்லப்பட்டதில்லை.அவர்களுடைய தத்துவங்களையும்,கோட்பாடுகளையும் கொள்கையளவில் தான் கலைஞர் எதிர்க்கிறாரே தவிர வன்முறையை என்றும் கையில் எடுத்ததில்லை.

ஆரிய எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவையும் ஆரியர்களாலேயே உருவானது.இனவெறியையும்,சாதிவெறியையும் அப்பட்டமாக கடைப்பிடித்துக் கொண்டிருந்த அந்தக்காலத்தில் திராவிட இயக்க அரசியலின் தோற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

இன்னும் ஆரிய எதிர் அரசியலின் தேவை முடியவில்லை.சாதி,இன ரீதியாக தங்களை உயர்ந்தவர் என்று பறைசாற்றுவதில் பிராமணர்கள்
தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
பிராமணர்களை முதலிடத்தில் இருந்து வெளியேற்றியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களுக்கும் மெதுவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.அதை முறியடிக்கும் முயற்சி தான் இந்து வெறியர்களால் பரப்பப்படும் முஸ்லிம் எதிர்ப்புணர்வு பிரச்சாரம்.

மோதி தன்னுடைய பொருளாதாரத் தத்துவங்களால் தான் வெற்றி பெற்றார் என்று சொல்வது முட்டாள்தனமானது.லாலுவின் ஆட்சியில்
தான் பீகார் காட்டுமிராண்டி தேசமானது என்று பரப்பப்படும் விஷமப் பிரச்சாரம் போன்றது தான் மோதி ஆட்சியில் குஜராத் வளர்ந்து
விட்டது என்ற பிரச்சாரமும்.நீண்ட நெடுங்காலமாகவே குஜராத்திகள் வணிகத்திலும்,பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்கியவர்கள் தான்.
மோதி பெற்றுள்ள வெற்றி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கல்லறைகளின் மேல் கட்டப்பட்ட வெற்றி.

எனவே மோதியின் அரசியலையும்,கலைஞரின் அரசியலையும் ஒப்பிடுபவன் ஒரு பைத்தியமாகத் தான் இருக்க முடியும்.


Tuesday, December 25, 2007

வல்லவனுக்கு வல்லவன்

நல்லவனா வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்,
ஒரு வல்லவனா வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏற்றி வைக்கும்.
"தல"

அடர்ந்த காட்டுக்குள்ளே கண்களில் சிறிதும் பயமின்றி நெஞ்சு நிமிர்த்தி நடந்து வருகின்றான் அரையடி நீளம் கூட இல்லாத நம் கதாநாயகன்,அவன் ஒரு சிறு பல்லி.அவனை விழுங்கிவிட திட்டம் தீட்டி இரு வில்லன்கள் காத்திருக்கின்றனர்.ஒன்று பாம்பு,இன்னொன்று ஒரு பெரிய தவளை.

பல்லி இவர்களை கண்டும் காணாதது போல் தன் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.வழக்கம் போல் பாம்பு அதைக் கவ்விப்பிடித்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன்.ஆனால் பாம்புயோசிக்க ஆரம்பித்துவிட்டது.சில நிமிட தீவிர யோசனைக்குப் பின் தன் முடிவை கைவிட்டு விட்டது.பல்லி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.பெரிய தவளை விழிப்போடு காத்திருக்கிறது,தன் அருகில் வந்ததும் படக்கென்று அதைப் பிடித்து கபளீகரம் செய்து விட்டது.

அடுத்து தான் நம் கற்பனைக்கெட்டாத அந்தக் காட்சி அரங்கேறியது.சந்திரமுகி படத்தில் பேய்வீட்டிற்கு சென்று வந்த வடிவேலு "ஆ" வென்று வாயைத் திறந்து கொண்டு நிற்பாரே அதுபோல் அந்தத்தவளையும் சிலையாக நின்று விட்டது .ஆம்,செத்து விட்டது.

தவளையின் திறந்த வாய்க்குள் இருந்து நிதானமாக நடந்து வெளியே வந்துவிட்டது பல்லி.
உடம்பெல்லாம் விஷம் அந்தப் பல்லிக்கு.தவளை விழுங்கியவுடன் விஷத்தைக் கக்கியிருக்கிறது.

பல்லியின் விஷமத்தனம் தெரிந்து விலகிச்சென்ற பாம்பைப் பாராட்டுவதா,அல்லது பாம்புக்கும் தவளைக்கும் கடுக்காய் கொடுத்த பல்லியைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.

(NATIONAL GEOGRAPHIC சேனலில் பார்த்தது)

இதைப்போன்ற இன்னொரு வல்லவனின் சாகசத்தைக் காண இங்கே செல்லுங்கள்.
http://kurangumudi.blogspot.com/2006/04/blog-post_28.html

Tuesday, December 18, 2007

கரும்பச்சைப்படங்கள்







Saturday, December 8, 2007

யார் பிராமணன்?

இந்து மதம் என்பது ஒரு மதமல்ல , அதை ஒரு வாழும் நெறி என்று சொல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரே கூறியுள்ளார்.வாழும் நெறிக்கு ஆதாரம் வேதங்கள்.அதனால் இந்தமுறையை வேதநெறி அல்லது வைதீக நெறி என்று சொல்கிறார்கள்.

வேதநெறியின் படி பிராமணர் என்பவர் யார்?

குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்றுணர்ந்து, பருவ வயதில் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு , பின் காட்டிற்குள் சென்று துறவறம் மேற்கொண்டு ஆன்மீக உயர்நிலையை அடைந்து, இறுதியில் யாசகம் பெற்று தன் வாழ்வை நடத்துவதே ஒரு பிராமணனின் செயலாகும்.

இந்தக்கருத்துக்களை எல்லாம் அறிந்து கொள்வதற்கு முன்பே நான் நம்முடைய அம்மண சாமியார்களை பார்த்து வியந்து இருக்கிறேன்.முற்றும் துறந்தவர்கள் அவர்கள்.தனக்கென ஒரு கோமணத்துணி கூட வைத்துக்கொள்ளாத மகான்கள் , இவர்களைத் தான் பிராமணன் என்று நாம் கருத முடியும்.இவர்களிலும் போலிகள் உண்டு , அந்த போலிகளின் வழித்தோன்றல்கள் தான் இப்போது தங்களை பிராமணர் என்று கருதிக்கொள்பவர்கள்.

கடவுள் பக்தி , ஆன்மீகம் இரண்டும் வேறுவேறானவை.மனிதன் உணவுக்காக போராடும் காலத்திலேயே கடவுளைக் கண்டுபிடித்து விட்டான்.உணவுக்காகப் போராடும் நிலை போய் சொத்து சுகங்களுடன் வாழ ஆரம்பித்த பிறகு மனிதனுக்கு ஆன்மீக சிந்தனை தோன்றுகிறது.

ஆதிவாசி ஒருவன் அம்மணமாக திரிந்தால் அது அநாகரீகமாக நம்மால் பார்க்கப்படுகிறது,அதுவே அரசன் ஒருவன் தன்னை உணர்ந்து,இவ்வுலகத்தின் நிலையாமையை உணர்ந்து, தன் அறியாமையை உணர்ந்து
விழிப்புணர்வு அடைந்து அம்மணமானால் அவன் ஒரு உயர்ந்த துறவியாக கருதப்படுகிறான்.அப்படிப்பட்டவர்கள் தான் புத்தரும்,மகாவீரரும்.

இவர்கள் தான் உண்மையான பிராமணர்கள்.இவர்கள் தாம் பெற்ற இன்பத்தை , முக்தியை அனைவரும் அடையலாம் என்று சொல்லி அதற்கான வழிகளையும் காட்டினார்கள். அதற்கு அர்த்தம் ,மனிதரில் உயர்வு, தாழ்வு கிடையாது, அனைவரும் பிராமணர் ஆகலாம் என்பது தான்.

இந்தியா செல்வச்செழிப்பில் திளைத்த அந்தக் காலத்திற்கு இதெல்லாம் பொருத்தமான சிந்தனைகள் தான்.இப்போது பெரும்பாலான மக்கள் உணவுக்குப் போராடிக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் ஆன்மீக தத்துவங்களை மூட்டை கட்டிவிட்டு கொலைவெறியுடன் உலக அரங்கில் போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு
http://karuppupaiyan.blogspot.com/2006/11/blog-post_29.html
http://vaithikasri.blogspot.com/2007/11/blog-post.html

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்